000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a நான்முகன் |
300 |
: |
_ _ |a புராணச் சிற்பம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a கருவறை விமானம் வடக்கு தேவகோட்டத்தில் நிற்கும் நான்முகன் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a பிரம்மா மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர்,சனந்தனர்,சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து திருமால் தோன்றிட அவருடைய தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மன் ஹிரணிய கர்ப்பத்திலிருந்து தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஹிரண்யம் என்பதுபொன்னையும் கர்ப்பம் என்பது கருவையும் குறிப்பதாகும். பிரம்மன் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து வந்த தாமரை மலரின் மீது தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவர் தானாகத் தோன்றியவர் எனவே இவர் பிரபஞ்சத்தின் முதல்வர் என்றும் பிதாமகன் என்றும் அழைக்கப்படுவார். கருவறை விமானத்தின் வடக்குப்புறம் உள்ள தேவகோட்டத்தில் பிரம்மன் சமபாதத்தில் நேராக நின்றநிலையில் உள்ளார். மூன்று முகங்கள் மூடிய விழிகளோடு தெரிகின்றன. ஜடாமகுடம், நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் வேலைப்பாடுள்ள இரு அணிகள், கைகளில் கேயூரம், முன் வளைகள், நடுமார்பில் பிரம்ம முடிச்சுடன் கூடிய முப்புரி நூல், வயிற்றில் உதரபந்தம், இருபுறமும் முடிச்சுகளோடு கணுக்கால் வரை நீண்டு தொங்கும் ஆடை, ஆடையணி வகைகளைக் கொண்டு விளங்குகிறார். நான்கு திருக்கைகளில் மேலிருகைகளில் அக்கமாலையும், கெண்டியும் விரல்களில் உள்ளன. கீழிரு கைகளில் இடது கை தொடையில் வைத்தபடி ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. வலதுகை சிதைந்துள்ளது. வலது கை அபய முத்திரையாக இருக்கலாம். |
653 |
: |
_ _ |a நான்முகன், பிரம்மன், அன்னவாகனன், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், சோழமண்டலம், குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில் |
710 |
: |
_ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 |
: |
_ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
905 |
: |
_ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 |
: |
_ _ |a 10.97344457 |
915 |
: |
_ _ |a 78.38864207 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000141 |
barcode |
: |
TVA_SCL_000141 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000141_குறங்கணி-நாதர்-கோயில்_நான்முகன்-001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_000141_குறங்கணி-நாதர்-கோயில்_நான்முகன்-001.jpg
|